எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?
தாமஸ் ஆல்வா எடிசன், 1879ல் மின்விளக்கைக் கண்டறிந்தார். அப்போதே, அவர் தற்செயலாக 'கிராபீன்' (Graphene) என்ற அதிசயப் பொருளையும் உருவாக்கியிருக்கலாம் என, ரைஸ் பல்கலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிராபீன், 21-ஆம் நுாற்றாண்டு இயற்பியலின் மைல்கல்லாகக் கருதப்படும் ஒரு பொருள். அது 19-ஆம் நுாற்றாண்டின் எளிய கருவியில் மறை ந்திருந்தது வியப்பை அளிக்கிறது.
ஆய்வாளர்கள் எடிசன் காலத்து கார்பன் இழை பல்புகளை மீண்டும் உருவாக்கிச் சோதித்தபோது, மூலக் கூறுகளின் வேதிவினையால், 'டர்போஸ்ட்ரேடிக் கிராபீன்' என்ற பொருள் உருவாவதைக் கண்டறிந்தனர். நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள் இல்லாமலேயே, அதீத வெப்பத்தின் வாயிலாக கார்பன் அணுக்களை கிராபீன் அடுக்குகளாக மாற்ற முடியும் என்பதை இந்த ஆய்வு ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது.
எடிசனின் அசல் பல்புகளில் கிராபீன் இப்போதும் இருக்குமா என்பதை உறுதிசெய்ய முடியாது. என்றாலும், பழைய கண்டுபிடிப்புகளை, நவீனக் கருவிகள் கொண்டு மீண்டும் ஆராய்வது புதிய அறிவியல் விளக்கங்களைத் தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. வரலாற்றை திருப்பிப் பார்ப்பது, அறிவியலுக்கு உதவும்.
மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக