ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சண்முகவேல் பட்டினம் மன்னார் வளைகுடா கடற்கரை கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் ஆமைகள் பாதுகாத்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கடந்த டிச., மாதத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக அதிகளவில் வருகின்றன. அவற்றை பாதுகாக்கவும் முட்டைகள் இடுவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கும் கடல் ஆமைகளை உரிய முறையில் பாதுகாப்பாக கடலில் விடுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மீன்வள அமலாக்க எஸ்.ஐ., சித்தன், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டி.எஸ்.பி., மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாகராஜன், சிறப்பு எஸ்.ஐ., கண்ணன், ரஜினி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் ஆர்வமுடன் கருத்தரங்கில் கலந்து கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.
மேலும்
-
இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி
-
ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
-
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
-
கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்