தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி நடப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது.
பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீக பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் என திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.
வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்
-
கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
-
ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு
-
விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
-
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்