இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 69 பேர் உடல்சிதறி பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டனர். 169 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
இஸ்லாமாபாதில் ஷெஹ்சாத் நகர் பகுதியில் உள்ள மத வழிபாட்டுத்தலத்தில் ஏராளமானோர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்தது.
பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் அங்கே ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. என்ன நிகழ்ந்தது என்பதை உணர முடியாமல் வழிபாடு நடத்தியவர்கள் பதற்றம் அடைந்தனர். சில வினாடிகள் கழித்தே அங்கு வெடித்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
குண்டுவெடிப்பில் பலரும் சிக்கி ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். அவர்களில் பலர் படுகாயங்களுடன் அலறியபடி துடித்தனர். தகவலறிந்த போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 69 பேர் பலியாகி உள்ளனா, 169க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் நகர காவல்துறை செய்தி தொடர்பாளர் தாகி ஜாவத் கூறுகையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து கையாண்டு வருகிறோம். சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய தடயவியல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தெஹ்ரிக் இ தாலிபன் இயக்கமே இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஓ.. இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?
வெள்ளிக்கிழமை ஆனா போதும்
தீவிரவாதம் இந்த உலகை அழிக்கும் வட இந்தியர்கள் புரிந்து கொண்டார்கள், குறிப்பாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை, இலங்கையில் கூட உள்ள தமிழ் மக்கள் கொடூரமானது என்று புரிந்து கொண்டுள்ளனர், தமிழ் நாட்டு தமிழர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்
அந்த சொர்க்கபூமிக்காக வக்காலத்து வாங்கும் இங்குள்ள ஓட்டுபொறுக்கி பச்சோந்திகள் தாராளமாக அங்கு செல்லலாம், தடுப்பார் யாருமில்லை.
ஈரான் இராக்கில் உள்ள மதத்தினரை , வாஹபி கொல்கிறது
இதான்டா அமைதி மார்க்கம் நம்புங்க
ஓசி சோறுகளுக்கு இங்கு நடபதற்கு எல்லாம் கண்ணுக்கு தெரியாது போல?
நம்புங்க நாங்க அமைதியான ஆட்கள் என்று?
யப்பா, தெரிஞ்சோ தெரியாமலோ, நாட்டை பிரிச்சுகொடுத்த புண்ணியவானுக்கு நன்றி.
கான்கிராஸ் க்கு நன்றிமேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்
-
கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
-
ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு
-
விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
-
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்