'கல்வி வளாகங்கள் அருகில் மதுக்கடைகள் வேண்டாம்!'

பொள்ளாச்சி: இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் முகமது ஆஷிக் நிருபர்களிடம் கூறியதாவது:

'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். முதல் கட்டமாக,கல்வி வளாகங்கள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழங்குடியின மக்கள் அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement