அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை 2026 மே அமலாகிறது
சிவகங்கை: தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங் களுக்கு மே மாதம் விடுமுறை என சமூக நலன், மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
அங்கன்வாடி மைய ஊழியர்கள், ஐ.சி.டி.எஸ்., மைய ஊழியர்கள் சங்கத்தினர் சில நாட்களாக பணி நிரந்தரம், மே மாதம் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 2026 மே கோடை விடுமுறை விடப்படும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை காலங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யும் நோக்கிலும், உலர் உணவு வழங்க வழிவகை இல்லை என்பதால், ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் சத்து மாவு என கணக்கிட்டு 24 நாட்களுக்கு ஒரு கிலோ 200 கிராம் சத்து மாவினை குழந்தைகளின் வீட்டிற்கே எடுத்து சென்று வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி
-
ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
-
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
-
கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்