பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: நேபாளத்தில் பயணிகள் 13 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பைதாடி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடிய விடிய மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து (2)
சக்தி - ,
06 பிப்,2026 - 15:39 Report Abuse
அங்கேயும் கதிசக்தி போட்டுத்தள்ளுது 0
0
Reply
SJRR - ,இந்தியா
06 பிப்,2026 - 15:32 Report Abuse
இப்பொழுதெல்லாம் பல விபத்துக்கள் ஓட்டுனரின் கட்டுப்பாடு இல்லாததால்தான் நடக்கிறது. கவனம் தேவை.
உயிர் நீத்த அனைவருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள். ஓம் ஷாந்தி. 0
0
Reply
மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்
-
கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
-
ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு
-
விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
-
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்
Advertisement
Advertisement