வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
புதுச்சேரி: வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி செல்லுவதற்கு உதவியாக அமையும். நமது கனவு, இளைஞர்களின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. புதுச்சேரியில் மின்னணு வாகனங்கள் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.
செமி கண்டக்டர் திட்டம் புதுச்சேரிக்கு பெரும் வளர்ச்சியாக அமைந்துள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அரசு செய்து கொடுக்கும். பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கிறார். சமீபத்தில் மிகப்பெரிய தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தை நடத்திவிட்டு சென்று இருக்கிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் தேஜ கூட்டணி கூட்டம் இருந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வருகிறது என்று பார்ப்போம். எல்லா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் அல்ல. நாம் எப்பொழுதும் நாட்டின் வளர்ச்சி, நாட்டின் தொலைநோக்குப் பார்வை, வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி தான் நாம் இந்த பட்ஜெட்டை தயாரித்து இருக்கிறோம்.
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவது உறுதி செய்யப்பட்டது. திமுக வீட்டிற்கு செல்லும் நாளும் நிர்ணயிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
தமிழக பி.ஜே.பி ஒற்றுமை இல்லாத தலைவர்களால் வாய்ப்பேயில்லை . இருந்த ஒரே தலைவர் அண்ணாமலை அவரையும் வெறுப்பில் விரட்டிவிட்டார்கள் . தற்போதய நிலை ஓட்டுநர் இல்லாதே வண்டி போன்றே .
மத்திய அமைச்சர் எல்.முருகன் சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது மண்ணைக் கவ்வியவர். இவர் தமிழ்நாட்டு தேர்தல் பற்றி சொன்னாலே நம்பமுடியாது. இந்த இலட்சணத்தில் கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி பற்றிய தேர்தல் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கிறார். எல்லாம் சோதனையான காலம் என்பதைவிட வேறு என்ன?
இவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக தேர்தலில் போட்டியிடுவாரா? எப்படியும் வெல்லப்போவது உறுதி என்றால் அன்புமணி, தினகரன் போன்றோர் இந்த தேர்தலில் நிற்க பயப்பட வேண்டும்?
காமெடி பண்ணாதீங்க.இருந்தாலும் உங்க நம்பிக்கையை பாராட்டுறோம்.
அப்போ EVM .தேர்தல் ஆணையம் அப்படி
விழிப்புணர்வு உள்ள மாநிலம் .வாக்காளர்கள் எப்பொழுதும் புத்தி சாலிகள்
தமிழ்நாடு, பாண்டி, அசாம் , மேற்கு வங்கம் , கேரளா ஓகே... ஆனால் கேரளா ?? மேற்கு வங்கம் ?? தமிழ்நாடு ?? பாண்டி ???எதையாவது அடிச்சு விடுங்க
தமிழக்தில் எடுபடாது
இரு நபர்கள் முட்டு கட்டை
திருந்துங்க போதையிலே உங்கள எல்லாம் இந்த திமுக வச்சிருக்கு விடியாத அரசுக்கு எதுக்கு தீப்பந்தம்
யப்பா சாமி ...
முடியலை ஆனாலும் அண்ணாமலைக்கு இவர் கொஞ்சம் குறைவு தான்மேலும்
-
தேர்தல் திருவிழாவில் கடை விரிக்கும் புதுக்கட்சிகள்; தவெக மீது உதயநிதி மறைமுக 'அட்டாக்'
-
அமெரிக்கா அபார பந்துவீச்சு; இந்திய அணி தடுமாற்றம்
-
இதுவரை அடையாத வெற்றி இந்தத் தேர்தலில் கிடைக்கும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று 51 பேர் சரண்
-
திமுக பிரசாரத்திற்கு 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்துவதா? இபிஎஸ் கடும் கண்டனம்
-
காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்