இது நடந்தால்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: சொல்கிறார் திருமா!

50

சென்னை: ''திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த இரு கட்சிகள் (பாமக, பாஜ) இடம்பெறும் அணியில் இடம்பெற மாட்டோம்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: அவர்கள் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பினார்கள். இவர்கள் ஜாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித் சமூகத்திற்கு எதிராக பரப்பினார்கள். சோசியல் இன்ஜினியரிங் என்ற யுத்தியை கையாண்ட காரணத்தினால், நாங்கள் வந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம்.

இந்த 2 கட்சிகள்



இந்த மாதிரி சோசியல் இன்ஜினியரிங் என்ற பெயரில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை உண்டு பண்ண கூடிய நிலையான பகையை வளர்க்கக்கூடிய இந்த இரு கட்சிகளுடனும் (பாமக, பாஜ) எந்த காலத்திலும் நாங்கள் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்தக் கட்சிகள் இடம் பெறக்கூடிய அணியிலும் இடம் பெற மாட்டோம் என்ற ஒரு முடிவை நாங்கள் ஏற்கனவே எடுத்து விட்டோம்.

நிலைப்பாடு



இன்றைக்கு நேற்று எடுக்கவில்லை. அந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. திமுக ஒரு முடிவை எடுத்தால், அது எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. அவ்வளவுதான். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

எந்த சமரசமும்…



இதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அவ்வப்போது வரும் தேர்தலுக்காக நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளக் கூடாது. நம்முடைய கருத்தியல் சார்ந்த பயணத்தில் நம்பகத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும். அந்த நம்பகத் தன்மையை பாதுகாக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement