வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் 10,500 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; கேரளாவில் தொடரும் பயங்கரம்

7


மலப்புரம்: கேரளாவில், வெங்காயம் ஏற்றி வந்த லாரியில், 10,500க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரியின் உரிமை யாளரிடம் விசாரணை நடக்கிறது.

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தின் செம்மாடு பகுதியில், வெடிப்பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்படி திரூரங்காடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.


அங்குள்ள செங்கல் சூளையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனையிட போலீசார் முயன்றனர்.


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சிலர் தப்பியோடினர். இதையடுத்து, அந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.


அதில், வெங்காயம் ஏற்றி வந்த பெட்டிகளுக்கு இடையே, 10,500க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், கம்பிகள் அடங்கிய, 245 பெட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து லாரியுடன் பறிமுதல் செய்தனர்.


இதைத்தொடர்ந்து லாரியின் உரிமையாளரான பெண்ணை, கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது, சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு பயன்படுத்த எடுத்துச்செல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


கடந்த 4ம் தேதி, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தின் கடம் கோட்டில், வேனில் தர் ப் பூ சணிகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 18,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 48,000 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement