தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ரயில்வே திட்டங்கள் மற்றும் நிதி தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
தமிழகத்துக்கு புதிய திட்டங்களை அனுமதிக்க உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்கவில்லை. அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு 2500 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 931 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை. 94 சதவீத நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்து, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5 திட்டங்களுக்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணை இன்னும் வழங்கப்படவில்லை. நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக தாமதமின்றி நிதி விடுவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விஷயம் தெரிகிறதோ இல்லையோ அல்லது புரிகிறதோ இல்லையோ ஒரு கடிதம் எழுதி விடவேண்டியது . பிறகு நான் எவ்வளவு புத்திசாலி என்று பார்த்தீர்களா என்று சொல்ல வேண்டியது. இவ்வளவுதான் இவர்கள் நடவடிக்கை . மக்களே உங்களை முட்டாள என்று நினைக்கிறார்கள் .
தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களை மட்டும் அறிவித்து விட்டு அதற்கான நிதியை கொடுக்காமல்
அந்த திட்டங்களுக்கு தமிழக அரசு தேவையான நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை என்று குற்றம் மட்டும்
சுமத்துவது மத்திய பாஜக அரசு தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி, துரோகம்! இதற்கு தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்!
இதற்கு நேரடியாக கேட்டுவிடலாம் தேர்தல் வருது கை செலவுக்கு காசு கொடுங்க என்று
எப்படி இருந்தாலும் டிக்கெட் எடுக்காமல் திருட்டு பயணம்.
தனுஷ்கோடி 18 கிமீ இணைப்பு இருப்புப் திட்டத்திற்கு 1-3-2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. திட்ட மதிப்பு 734 கோடி. தமிழ்நாடு அரசு தேவையான நிலத்தை 17-12-2025வரை வழங்கவில்லை. இந்த தகவல் ரயில்வே அமைச்சர் ஆண்டிமுத்து ராஜாவிற்கு அளித்த எழுத்துப்பூர்வமான 2894 வரிசை கேள்விக்கு உரிய பதிலாக பாராளுமன்றத்தில் அளித்திருக்கிறார். 7 ஆண்டுகளாக இங்குள்ள தமிழ்நாடு அரசு என்ன செய்தது? தங்கள் மேலிருக்கும் குறைகள் இவருக்கு தெரியாது. எதற்கெடுத்தாலும் சிறுபிள்ளைத்தனமாக மற்றவர்களை குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்?
நீங்கள் நிலம் ஒதுக்கி கொடுத்தால் நிதி தானாக ஒதுக்கப்படும்
1993 டு 2013 தமிழ் நாட்டுக்கு ரயில்வே துறை என்ன செய்தது என்று ராகுலிடம் கேட்டு சொல்லனும்
திமுக ஆட்சி முடிந்த பிறகுதான் நிதி ஒதுக்கப்படும். இப்போது ஒதுக்கினால் நிதி குடும்பம் ஒதுக்கி விடும். அதுவும் நிலம் கையக படுத்தும் போது கமிஷன் அதிகமாக வரும்.
ஏற்கெனவே தமிழகத்தில் அறிவிக்கப் பட்ட ரயில்வே திட்டங்களுக்கு முதலில் முழுமையாக நிலம் ஒதுக்கி விட்டு அப்புறம் நிதி ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசுங்கள்!
இந்த உருட்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியது. நேரில் பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை வைக்க தைரியம் இல்லை. ரயில்வே திட்டங்களுக்கு 24% தான் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள் 100% இடம் ஒதுக்கப்பட்டால் தான் நிதி அளிக்க முடியும் என்று மத்திய அரசு சொல்லுகிறது. பொய் சொல்வதில் பொய் வாக்குறுதி கொடுப்பதில் நமது முதல்வரை போல் யாரும் கிடையாது. என்னத்த சொல்ல.மேலும்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக
-
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறைத்துள்ளது: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்
-
பிரதமர் மோடியுடன் சந்திப்பு மிகவும் முக்கியமானது: மலேசியா பிரதமர் இப்ராஹிம்
-
அம்மாவின் அர்ப்பணிப்பில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
-
தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு