பிரதமர் மோடியுடன் சந்திப்பு மிகவும் முக்கியமானது: மலேசியா பிரதமர் இப்ராஹிம்

1

கோலாலம்பூர்: பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதாவது: பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுக்கு மிகவும் முக்கியமானது. 1957ம் ஆண்டு முதல் இந்தியா-மலேசியா இடையே நீண்ட கால உறவு தொடர்ந்து வருகிறது. இந்தியா-மலேசியா இடையே இன்று 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் உறுதியான ஆதரவளிப்பதில் பிரதமர் மோடி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


பாராட்டுக்கள்



நான் நிச்சயமாக எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். நமது நல்லுறவுகளின் அடையாளமாக, சபா என்ற மாகாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகத்தைத் திறக்கும் இந்திய அரசின் முடிவுக்கு நான் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளேன். சுற்றுலா துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் இந்த அற்புதமான வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம். மேலும் விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாலும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாலும் ஏராளமானோர் பயன் அடைவார்கள்.


பெரிய நாடு




நான் பலமுறை இந்தியாவிற்குச் சென்று நூற்றுக்கணக்கான இடங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனாலும் நான் இன்னும் முழு இந்தியாவையும் சுற்றிப் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். அது மிகவும் பெரிய நாடு. வரலாறு, கலாசாரம், கலைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அற்புதமான நாடு. இவ்வாறு அன்வார் இப்ராஹிம் கூறினார்.

Advertisement