மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்

பெருமாநல்லுார்: இந்திய ஜனநாயக கட்சியின் 4வது மாநில மாநாடு கடலுார் மாவட்டம், வேம்பூரில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில் 500 பேர் நேற்று காலை பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து, வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களை எம்.எல்.ஏ. விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அ.தி.மு.க. சார்பில் சங்கீதா, கொ.மு.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement