தேர்தல் அறிக்கை நோட்டீஸ் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்


பெருந்துறை: அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அடங்கிய நோட்டீஸை மக்களுக்கு வழங்கி, பிரசாரம் துவக்க நிகழ்ச்சி, பெருந்துறையில் நடந்தது.


பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ஜெயகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன், மக்களுக்கு நோட்டீஸை வழங்கி துவக்கி வைத்தார். புது பஸ் ஸ்டாண்ட், கோட்டை முனியப்பன் கோவில், மாரியம்மன் கோவில், கோட்டைமேடு, ராஜவீதி ஆகிய இடங்களில் நோட்டீஸ் வழங்கி பிரசாரம் செய்தனர்.


மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், பெருந்துறை நகர செயலாளர் கல்யாணசுந்தரம், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மன் சாந்தி ஜெயராஜ் பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ராயல் சரவணன், த.மா.கா.,
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement