விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்: செல்லூர் ராஜூ பேட்டி

6

மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது: செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அது ஆயிரம் பேசும். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம்.

எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது. ஆதவின் பேச்சை விஜயின் ரசிகர்கள் ரசிக்கலாம், மக்கள் ரசிக்க மாட்டார்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Advertisement