இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ராணிப்பேட்டை: இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான். அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலையை இன்று (பிப்ரவரி 09) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட ரேஞ்ச் ரோவர் காரை முதல்வர் ஸ்டாலின் ஓட்டிப் பார்த்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழில்துறையின் முக்கிய முகமாக டாடா நிறுவனம் உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் இருந்து வருகிறது. டாடா என்றாலே அதற்கு ஒரு ஆழமான உறவு உள்ளது.
தமிழகத்தில் இருக்கும் Titan, Tcs, தாஜ் ஹோட்டல் உள்ளிட்டவைகள் எல்லாம், 'தமிகத்தின் மீது டாடா நிறுவனம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளங்கள். மறைந்த ரத்தன் டாடா கண்ட கனவு படியே, டாடா மோட்டார்ஸ் தமிழகத்தில் மேற்கொள்ளக் கூடிய இந்த முதலீடு, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தயா முழுவதும் புதிய எரிசக்தி வாகன வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும்.
வேலைவாய்ப்பு
வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவில் வாகனம் மற்றும் மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழகம் தான். இங்கு தொடங்கப்பட்டுள்ள ஆலை தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே முக்கியமானது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம். மின்சார வாகன உற்பத்தி, மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. உலக அளவில் போட்டியிடும் வாகனங்களை தயாரிக்கும் ஆலை தமிழகத்திலும் உள்ளது என்பது நமக்கு பெருமை. இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான்.
தமிழகம் டாப்பில்...
அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான். மேலும் மோட்டார் வாகன துறையில் தமிழகம் டாப்பில் இருக்கிறது என்றால் அதற்கு பெரிய பாரம்பரியமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய திட்டங்களை தமிழகத்தில் நிறுவியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை
ராணிப்பேட்டையில் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அதாவது தமிழ் தெரிந்த மும்பை புனே நகரங்களை குறிப்பிடுகிறார். முதல் 4 கார் கம்பெனிகளான பியட் அம்பாசடர் மாருதி இருக்கும் போது ஸ்டாண்டர்ட் மோட்டார் கம்பெனி யை காலி செய்தது தமிழகம், கழகம், ஒட்டுண்ணிகள். மம்தா வெல்லாம் பிறகு தான்
போதை மருந்து உற்பத்தி மையமும் தமிழ்நாடு தான். அந்த பெருமையை விட்டுட்டீங்களே . தன்னடக்கம்.
நாடு விடுதலை பெறும் முன்பே தென்னகம் உற்பத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தில் முன்னணியில்தான் இருந்தது. இங்கு திராவிஷ ஆட்சி அமையாமல் இருந்திருந்தால் உலகத்திலேயே சிறந்த பகுதியாக இருந்திருக்கும்.
அரசு பஸ்கள் நமது வாகனத்துறையின் சாதனைதான். உயிருக்கு உத்தரவாதமில்லை.
அப்போ....
ஹரியானா - மாருதி ஸீசுக்கி
குஜராத் - டாடா, ஸுசுக்கி
மகாராஷ்டிரா - டாடா, மஹிந்திரா, வோல்ஸ்வேகன், பென்ஸ், பஜாஜ், ஹோண்டா.
TNPC எக்ஸாம் நடத்த வழி இல்லை. வாகன உற்பத்தி பத்தி பேசுறார் ட்ராவிடிய அப்பா
பத்து லச்சம் கோடி முதலீட்டில் இது எத்தனை கோடி. ஐயாயிரம் பே ருக்கு வேலை. போர்ட் மோட்டார்ஸ் ஏன் வெளியேறியது. தொழில் வளர்ச்சிக்காக உலகம் சுற்றும் முதல்வர் சமீபத்தில் சுவிற்சர்லாந்து devos நகரில் நடை பெட்ர அகில உலக பொறுளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ஏன் யாரையும் அனுப்பவில்லை.
சில விஷயங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்து வருவதை முதல்வர் சொல்ல மறுக்கிறார். இளம் விதவைகள் உருவாகுவது. டாஸ்மாக்கினால கொலை கொள்ளை சீரழியும் குடும்பங்கள் இதைப் பற்றி சொல்லாமல் இருப்பது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழகம் முதலிடம் ஆக இருப்பது கடன் வாங்குவதிலேயே இந்தியாவில் முதல் மாநிலமாக இருப்பது. ஐந்தாவது படிக்கு மாணவன் கஞ்சா உபயோகிப்பது. மாதம் ஒரு முறை மின்கட்டணம் நிர்வகிப்பது கல்விக்கடனை ரத்து பண்ணுவது சமையல் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பது இன்னும் எத்தனையோ இருக்கிறது இதைப் பற்றி எல்லாம் முதல்வர் பெருமையுடன் பேச மாட்டேன் என்கிறார்.
அவருக்கு தன்னடக்கம் ஜாஸ்தி.
எல்லாவற்றை பற்றியும் சொல்ல மாட்டார்.
இந்தியாவின் TROY DETROIT இல் உள்ளது போல ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி தமிழகத்தில் தான் உள்ளது FORD ஹூண்டாய் எல்லாம் அன்றே கொண்டுவந்தவர் முத்துவேல் கருணா தான், தொலை நோக்கு சிந்தனை அளப்பரியது
ஸ்டான்லி மருத்துவமனையில் மூன்று அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்துள்ளார்கள் .....எப்பேர்ப்பட்ட படித்த வளர்ச்சி மாநிலம் ....
இருநூறு ஓவா ஊப்பீ டாடா கார் நிறுவனம் எங்கிருந்து வந்ததுனு சொல்லு பாப்போம்
கார் வாங்க நைனா அனைவர்க்கும் பத்து லட்சம் ஓவா பணம் தருவார்
அதன் பிறகு பலமுறை தேர்தலில் தோல்வி அடைந்தார்
இது எனக்கு தெரிந்து 100வது ஸ்டிக்கராக இருக்கும்...இது ஒன்னும் உங்கள் ஆட்சியில் கொண்டு வந்த தொழிற்சாலை இல்லை.. துவங்குவது 2026 ஆனால் இது அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடு. ஸ்டிக்கர் ஸ்டாலின் அவர்களே. போதும்.. உங்கள் நாடகம்.. தமிழகத்தை வைத்துக்கொண்டு உங்கள் குடும்பம் ஆடும் ஆட்டம்..மேலும்
-
திமுகவை அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
காஞ்சி கோவில் மண்டபம் இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி
-
கல்லூரி வளாகத்தில் மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்: பஞ்சாப்பில் அதிர்ச்சி
-
வேளாண் பணிகளுக்கான வாகனங்களை சோதனையில் பறிமுதல் செய்யக்கூடாது; போலீஸ் டிஜிபி உத்தரவு
-
ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடக்கும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
-
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்