ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடக்கும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
சென்னை: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குளறுபடியால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச்15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
@1brடிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்.8ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வர்களின் பெயர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதும் ஏராளமான தேர்வர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். சென்னையில் தேர்வர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால் தொடக்கத்தில் சென்னையில் மட்டும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வு மைய குளறுபடி எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில், ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான -தாள்-I- தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் 2026ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 2026ம் ஆண்டு பிப். 28க்குள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
2026ம் ஆண்டு பிப்.22ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம் போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 2026ம் ஆண்டு பிப்.11 அன்று வெளியிடப்படும்.
இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
தியாகு - ,இந்தியா
10 பிப்,2026 - 10:56 Report Abuse
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி குரூப் 2 தேர்வை ரத்து செய்து சொல்லாததையும் செய்து விட்டார்கள் 0
0
Reply
Sun - ,
09 பிப்,2026 - 22:15 Report Abuse
மாவட்ட அளவில் தேர்வு மையங்களை எழுதும் தேர்வர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதன் வினாத்தாள் எண்களை வைத்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே தேர்வு மையங்களை தேர்வு செய்வார்கள். சீலிட்ட வினாத்தாள்கள் அரசு கருவூலத்தில் வைக்கப் பட்டு மறுநாள் காலை தேர்வுக்கு முன்னர் அந்தந்த தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் ஒப்படைக்கப் படும். இதில் எந்தக் குழப்பமோ , கவனக் குறைவோ ஏற்பட வழியே இல்லை. மேலும் இத்தகைய தேர்வுகளை நடத்தி, நடத்தி வருவாய் துறையினர் மிகவும் அனுபவப் பட்டவர்கள். தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டு இருக்காது. குழப்பம் சென்னை டி.என்.பி.எஸ்சி அதுவலகத்தில் நடந்திருக்க வேண்டும். வினாத்தாள்கள் எண்களும் பதில் எழுதும் சீட்டுன் எண்களும் மாறுபட்டிருக்கலாம், சீலிட்ட உரையின் மேல் உள்ள வினாத்தாள் எண்களும் உள்ளே உள்ள வினாத்தாள் எண்களும் மாறுபட்டிருக்கலாம், சென்னை கேள்வித்தாள்கள் மதுரைக்கு செல்வது போன்ற தவறுகள் நடந்திருக்கலாம் அல்லது இவைகளையும் தாண்டி மிகப் பெரிய தவறு நடந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் டி.என்.பி.எஸ்.சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். வெறுமனே தேர்வு மைய குளறுபடி எனக் கடந்து சென்று விடக் கூடாது. மீண்டும் தவறு நிகழா வண்ணம் டி.என்.பி.எஸ்சியின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
09 பிப்,2026 - 19:54 Report Abuse
தில்லானா மோகனாம்பாள் படமா 0
0
Reply
GMM - KA,இந்தியா
09 பிப்,2026 - 18:53 Report Abuse
திராவிட விடியல் அதிகாரி சண்முக சுந்தரம் பணியிடை மாற்றம் அரசியல், அதிகாரிகள் கூட்டணியை உறுதி செய்யும்.. சுந்தரம் கீழ் மற்றும் மேல் உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய குளறுபடி. படிக்காத நபர் கூட இப்படி குழப்படி செய்ய முடியாது. இது சதி? 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
09 பிப்,2026 - 18:51 Report Abuse
ஆனாலும் விடியல் சார் ரொம்ப ஸ்ட்ரிட்டு, இதே நீட் தேர்வு குளறு படின்னு என்னமா ஆடின்னானுங்க, இப்போ எல்லோரும் பொத்திட்டு இருக்கனுங்க 0
0
Reply
மேலும்
-
பள்ளியில் பாம்பு, விஷப்பூச்சி கடித்து மாணவ, மாணவி பலி; இபிஎஸ் அதிர்ச்சி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி; முடங்கியது லோக்சபா
-
பார்லியில் விதி மீறிய எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுங்கள்; சபாநாயகருக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
-
'போதை'யால் கோஷ்டி மோதல் 4 பேருக்கு உருட்டுக்கட்டை அடி
-
போராட்டத்தில் பங்கேற்றதால் 8 ஊராட்சி செயலர் இடமாற்றம்
Advertisement
Advertisement