கல்லூரி வளாகத்தில் மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்: பஞ்சாப்பில் அதிர்ச்சி

அமிர்தசரஸ்: பஞ்சாபில் கல்லூரி வகுப்பறையில் முதலாம் ஆண்டு மாணவியை சுட்டுக் கொன்ற மாணவர், தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


பஞ்சாபின் டர்ன் டாரன் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படிக்கும் நவுசேரா பன்னவுன் என்ற மாணவி படித்து வந்தார். வகுப்பறையில் அவர் இருந்தபோது, உடன் படிக்கும் பிரின்ஸ் ராஜ் சிங் என்ற மாணவர் கல்லூரி வளாகத்தில் சுட்டுக் கொன்றார். இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் ராஜ் சிங்கும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


தகவல் அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement