ரேஷன் வாங்காத 10 லட்சம் பேர்; பொங்கல் பரிசு வாங்குவதில் ஆர்வம்
சென்னை: ரேஷன் பொருட்கள் வாங்காத, 10 லட்சம் கார்டு தாரர்கள், கடந்த மாதம், 3,000 ரூபாய் ரொக்கத் துடன் வழங்கப்பட்ட, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கியுள்ளனர்.
ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
அரிசி, சர்க்கரை, எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்களுக்கு என, தனி ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
சராசரி மொத்தம் உள்ள, 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களாக உள்ளனர். இதில், மாதம் சராசரியாக, 93 சதவீதம் அதாவது, 2.06 கோடி கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர்.
அதன்படி, 2025 அக்., நவ., டிச., ஆகிய மூன்று மாதங்களிலும் சராசரியாக தலா, 93 சதவீதம் பேர் வாங்கினர். மீதம் பேர், அரிசி கார்டு வைத்திருந்தும் பொருட்கள் வாங்குவதில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு, கடந்த ஜனவரியில் வழங்கியது. அம்மாதம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டது.
அவற்றை, 2.16 கோடி பேர் வாங்கியுள்ளனர். அதாவது, ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்த, 10 லட்சம் பேரும், பொங்கல் பரிசு, 3,000 ரூபாய் ரொக்கத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
முக்கிய காரணம் இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதி காரி ஒருவர் கூறியதாவது:
மாதம் சராசரியாக, 93 சதவீதம் பேர் பொருட்கள் வாங்கும் நிலையில், 97 சதவீதம் பேர் பொங்கல் பரிசு வாங்கியுள்ளனர். இதற்கு, 3,000 ரூபாய் ரொக்கம் முக்கிய காரணம். அரிசி கார்டு வைத்திருந்தும், 6 லட்சம் பேர் இன்னும் பரிசு பணம் வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
Chandrasekar.P Chandrasekar - ,இந்தியா
11 பிப்,2026 - 08:02 Report Abuse
சுமார் 0
0
Reply
bali - ,
10 பிப்,2026 - 18:55 Report Abuse
there is a provision that if ration is not drawn continuously for 6 months then the ration card will become defunct. if such provision is there then how the cash has been distributed for defunct cards? 0
0
Reply
Maruthu Pandi - ,இந்தியா
10 பிப்,2026 - 18:32 Report Abuse
நானும் அதில் ஒருவன்தான் . ரேஷன் கார்டு முக்கியமான அடையாள அட்டையாக வைத்து இருப்பதால் நான் ரேஷன் அ ட்டை வைத்து இருக்கேன் , மேலும் ரேஷன் அரிசி யை விட காசு கொடுத்து கடையில் வாங்கும் பொருட்கள் தரம் மிகுந்ததாக இருப்பதும் காரணம் . அது போக ரேஷனில் அரிசி வாங்குபவர்கள் எல்லாம் ஏழைகள் வெளி கடையில் வாங்குபவன் வசதியானவர் என்று எவன் சொன்னது ? இன்று நடுத்தர மக்கள் தான் ஏழை . 0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
10 பிப்,2026 - 18:21 Report Abuse
முதலில் இலவச அரிசியை நிறுத்த வேண்டும். பாம் ஆயில் கொடுப்பது போல் அரசிக்கு ஒரு விலை வைத்து கொடுக்க வேண்டும். அதுவும் ஒருகுறிப்பிட்ட அளவு மட்டமே. அதற்கு மேல் தேவை என்றால் விலை ஏற்றி கொடுக்க வேண்டும். Moondru மாதம் தொடர்ச்சியாக ரேஷன் வாங்க வில்லை என்றால் கார்டு பிளாக் செய்ய வேண்டும். பிறகு பாருங்கள்.If things are not followed strictly this will continue. 0
0
Reply
Ranjith - Thoothukudi,இந்தியா
10 பிப்,2026 - 17:10 Report Abuse
ரேஷன் மாதம் வாங்காமல் இருப்பவர்களுக்கு கொடுக்க கூடாது 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
10 பிப்,2026 - 16:14 Report Abuse
ஆமா நோகம காசு குடுத்தா யார் வேண்டாம்முன்னு விடுவாங்க? 0
0
Reply
Diraviam s - CHENNAI,இந்தியா
10 பிப்,2026 - 14:34 Report Abuse
இதனால் தான் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதோ ?? 0
0
Reply
M Pooragavan - ,இந்தியா
10 பிப்,2026 - 12:22 Report Abuse
பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பது எவ்வளவு உண்மை என்பதை நிரூபிக்கும் படி உள்ளது. எல்லோருக்கும் பொங்கல் பரிசு என்பது எவ்வளவு கேவலம் என்பதை அரசு உணரணும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
10 பிப்,2026 - 10:43 Report Abuse
நிறைய பேருக்கு வேட்டி சேலை தரப்படாமல் எங்கோ போய்விட்டன. திருட்டு மாடல்?. 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
10 பிப்,2026 - 08:01 Report Abuse
யாரெல்லாம் மாதம் 25000 rs சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு வெள்ளை அட்டை தான் கொடுக்க வேண்டும். அரிசி அட்டை கொடுக்க கூடாது. வருமான வரி செலுத்துவோர்க்கும், பென்ஷன் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள், வியாபாரிகள், எண அனைவருக்கும் இந்த விதி முறை அமுல் படுத்த வேண்டும். 0
0
SANKAR - ,
10 பிப்,2026 - 20:50Report Abuse
Govt already using PAN data to block many.My brother in law a corporate executive was blocked from getting 3000.New cards are issued after verifying PAN data.Bit old rice cards not yet blocked on the basis of PAN data 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
-
தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி
-
கண்ணுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம்; 2ம் நாளாக களமிறங்கிய கவுரவ விரிவுரையாளர்கள்
-
அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
Advertisement
Advertisement