தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி
திருப்பூர்: தென்னையில் நோய் தாக்குதலை தவிர்ப்பது குறித்து, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சார்பில், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூரில், பிரதான பயிராக தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னையில், இலை கருகல், வெள்ளை ஈ பூச்சி தாக்குதல், தஞ்சாவூர், கேரளா, சிவப்பு வண்டு தாக்குதல், நுண்ணுாட்டச்சத்து குறைபாடு, கருந்தலைப்புழு தாக்குதல் என, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.
இந்நிலையில், பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சார்பில், தென்னைய தாக்கும் நோய்களில் இருந்து, மரங்களை பாதுகாப்பது குறித்த பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
விஞ்ஞானிகள் கூறுகையில், 'தென்னை பராமரிப்பு குறித்து, தென்னை வளர்ச்சி வாரிய நிதியுதவியுடன், விவசாயிகளுக்கு தொடர் பயற்சி வழங்கி வருகிறோம். வேளாண், தோட்டக்கலைத்துறையினருடன் இணைந்து, இத்தகைய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.
மத்திய அரசு, பட்ஜெட்டில் தென்னை மேம்பாடு திட்டம் அறிவித்துள்ளது. வேளாண் பல்கலை வழிகாட்டுதல் படி, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்