வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல் 

பொள்ளாச்சி: 'விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தி.மு.க.வினர், வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி அருகே, மஞ்சநாயக்கனுாரில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 28 ஆடுகள், மர்மவிலங்கு தாக்கியதில் இறந்தன. ஒரே நேரத்தில் ஆடுகள் இறந்தது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகேசன், கோட்டூர் பேரூராட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு விவசாயிடம் ஆறுதல் தெரிவித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து, வனத்துறையிடம், 'விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.

Advertisement