ஓய்வூதியர்கள் தர்ணா

கோவை எழுபது வயது தாண்டிய ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சிவவானந்தா காலனியில் தர்ணா நடத்தினர்.

அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 7,850 ரூபாய் வழங்க வேண்டும், பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

சங்க செயலாளர் அருணகிரி, துணை தலைவர் இளவரசு, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தலைவர் பழனிசாமி பேசினர்.

Advertisement