அன்னுார் ஊராட்சியில் பணிகள் முடக்கம்

கோவை, 5 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு எட்டவில்லை. எனவே, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



காலியாக உள்ள ஆயிரத்திற்கு அதிகமான பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்; மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் உரிமைகளை வழங்க வேண்டும்; கணினி உதவியாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பவை இவர்களின் முக்கிய கோரிக்கைகள்.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், '5 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு எட்டவில்லை.

எனவே, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம். பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்காக நாங்கள் அஞ்சவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும்,' என்றனர்.

பணிகள் பாதிப்பு இந்த வேலைநிறுத்தம் காரணமாக எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி பணிகள், ஒப்பந்ததாரர்களுக்கான பட்டியல் தொகை (பில்) விடுவிப்பு மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement