பி.ஹெச்.இ.எல்., 2.30 மடங்கு விண்ணப்பம்

பி .எச்.இ.எல்., பங்கு விற்பனைக்கு, நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

'ஆபர் பார் சேல்' முறையில், நிறுவன முதலீட்டாளர்களுக்காக மொத்தம் 9.40 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளிலேயே 22.07 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். இது ஒதுக்கப்பட்ட அளவை விட 2.30 மடங்கு அதிகமாகும்.

சிறு, முதலீட்டாளர்கள் இந்த 'ஆபர் பார் சேல்' பங்கு விற்பனையில் இன்று பங்கேற்கலாம். நேற்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் பி.எச்.இ.எல்., பங்கு விலை, 5.58 சதவீதம் சரிந்து 260.80 ரூபாயில் முடிவடைந்தது.

Advertisement