சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
புதுடில்லி: சபாநாயகர் ஓம்பிர்லாவை காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ளார்.
லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுலுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, '' காங்கிரஸ், தங்கள் எம்பிக்களின் இழிவான நடத்தையை பற்றி பெருமை கொள்கிறது. அனைத்து பாஜ எம்பிகளையும் தடுத்து நிறுத்தி வைத்துவிட்டு அங்கு இருந்த, காங்கிரஸ் எம்பிக்களை பாஜ பெண் எம்பிக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால், மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். பார்லிமென்ட்ன் கண்ணியம், புனிதத்தை காப்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.'' எனக் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இன்று கிரண் ரிஜிஜூ அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். சுமார் 9 நொடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் எம்பிக்கள் 20 - 25 பேர் சபாநாயகரை அவரது அறையில் சூழ்ந்து கொண்டு மோசமாக திட்டியதுடன், பிரதமருக்கு மிரட்டல் விடுத்த போது, எம்பி ஒருவர் சட்டவிரோதமாக எடுத்த வீடியோ. விவாதம் மற்றும் ஆலோசனையில் பாஜவுக்கு நம்பிக்கை உள்ளது. மிரட்டல் விடுப்பதில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசுவதும், மறுபுறம் கிரண் ரிஜிஜூ தலைமையில் பாஜ எம்பிக்கள் அமைதியாக இருப்பதும் இடம்பெற்றுள்ளன.
வீடியோவை பார்க்க:
@twitter@https://x.com/KirenRijiju/status/2021812385460420837twitter
கையை நீட்டி பேசுபவர் கரூர் கருப்பாயி யா ?
காங்கிரஸ், திமுக பெண் உறுப்பினர்களிடம் மிக கவனம் தேவை. தற்போதைய சட்டம் எப்படியும் திரும்பும். வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம். ராகுல் போல் பிஜேபி உறுப்பினர்களால் சமாளிக்க முடியாது. ?
கரூர் தொகுதி எம்ப்பீ சோடிமணி ரொம்ப ஆக்ரோசமாக வெறிபிடித்த மாதிரி பேசுது
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது. கேடுகெட்ட மக்கள் பிரிதிநிதிகள். குழாயடியில் குடத்துடன் நின்று சண்டை செய்யத்தான் லாயக்கி . Total waste
ஓம் பிர்லா மிகவும் நல்ல மனிதர்தான். ஆனால் பாராளுமன்றத்தின் இந்த அவலநிலைக்கு அவரும் காரணம். தொடக்கத்தில் இருந்தே அவர் அட்டூழியத்தை பொறுத்துக்கொண்டு இருந்ததால் தான் ரௌடிகள் ராஜ்ஜியம் ஆகிவிட்டது நம் பாராளுமன்றம் அனுமதியின்றி பேசினாலோ, கூச்சல் இட்டாலோ - அந்த நபர்களை சபையை விட்டு வெளியேற்றியிருந்தால் - ஊழல் MP க்கள் ஒடுங்கி இருந்திருப்பார்கள்.
இது இந்தியாவின் மிகப்பெரிய அவலம்.மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்