நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. நாடு முழுவதும் நடந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கேரளா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கேரளாவில் பொது போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
-
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
Advertisement
Advertisement