செய்திகள் சில வரிகளில்

மாணவர்கள் மீது தாக்குதல்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில், 13 வயது சிறுவன், கத்தியால் குத்தியதில், இரண்டு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய சிறுவன், அந்தப் பள்ளியின் மாணவர் இல்லை என்பதும், தாக்குதல் நடத்தியபோது, 'அல்லாஹூ அக்பர்' என்று முஸ்லிம் மத கோஷத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய சிறுவன், சில மணி நேரத்தில் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



புயலில் 20 பேர் பலி

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர் தீவு. இங்கு நேற்று முன்தினம், 195 கி.மீ., வேகத்தில் பலத்த புயல் வீசியது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்; 19 பேர் காயமடைந்துள்ளனர்.



பள்ளியில் துப்பாக்கிச்சூடு

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் ஷோங்கலா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த, 18 வயது இளைஞர், சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசார் விரைந்து வந்து, அவரை சுட்டுக் கொன்றனர். எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Advertisement