ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
புதுடில்லி: ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
@1brவங்கதேசத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று (பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று மாலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும், ஜமாஅத் - இ - இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால், வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களில் கைப்பற்ற இருக்கிறது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்; வங்கதேச பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி வங்கதேச தேசியக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவாக அளிக்கும்.
நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (6)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
13 பிப்,2026 - 19:38 Report Abuse
ஜனநாயகமான வங்கதேசத்துடன் இனி மோதல்போக்கு தேவை இல்லை. உண்மையில் மிலிட்டரி ஆட்சி ஒழிந்துவிட்டது. ஆனாலும் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு குறையவில்லை. அதை குறைக்க வேண்டும் என்ற கடுமையான கண்டிஷனோடு இந்தியா இணக்கமான போக்கை இனி கடைபிடிக்கும். இல்லையெனில் பங்களாதேஷ் சீனாவின் கைக்கூலியாக மாறி இன்னொரு கிழக்கு பாகிஸ்தானாக மாறும். 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
13 பிப்,2026 - 16:59 Report Abuse
இஸ்லாமிய நாட்டில் ஜனநாயகம் சரிப்பட்டு வருமா ? 0
0
Reply
Rajesh - Bengaluru,இந்தியா
13 பிப்,2026 - 12:57 Report Abuse
ஐயா . ஆதரவு தெரிவிப்பது நல்ல விஷயம் தான் . அதோடு சேர்த்து அங்கு அப்பாவி இந்துக்கள் கொல்லப்படுவதுக்கு ஒரு எதிர்ப்பும் தெரிவித்து விடுங்கள் . வழக்கம் போல ஸ்க்ரிப்டில் மிஸ்ஸாகிவிட்டது . 0
0
vivek - ,
13 பிப்,2026 - 15:50Report Abuse
அதை உன் தலைவா ராகுல் சொல்லமாடாரா ராஜேஷை 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
13 பிப்,2026 - 11:35 Report Abuse
ஜனநாயகமா.. இன்னுமா நம்பறீங்க?? 0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
13 பிப்,2026 - 11:31 Report Abuse
Congratulations, Tarique Rahman Warm wishes on BNPs decisive victory in Bangladeshs parliamentary elections. Stop the Hindu massacres, and hang the criminals from the gallows, yes, dont massacre Hindus again. The peoples trust in your leadership runs so deep.... 0
0
Reply
மேலும்
-
குவாரி துவங்க கருத்து கேட்பு; வேறு கிராமத்தில் நடத்தாதீங்க!
-
பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
-
ஆன்லைனில் அலுவலக கட்டணம் ஆப்லைனில் அன்பளிப்பு கட்டணம்; தனியார் மருத்துவமனைகளுக்கு சொத்துவரியில் சீரமைப்பு தேவை
-
பெங்களூரு அருகே கோர விபத்து; 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி
-
தயாராகுங்கள் மாணவர்களே!
-
போடி - துாத்துக்குடி பகல் ரயில் சேவை தேவை; சும்மா நிற்கும் பெட்டிகளை கொண்டு இயக்கலாம் பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement