முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

13


புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிருபர்கள் சந்திப்பில்,
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற பகுதிநேர அரசியல்வாதி. நேற்று அவர் அவையில் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அவையில் ராகுல் குற்றச்சாட்டுகள்!



* தொழிலதிபர் அனில் அம்பானி ஏன் சிறையில் இல்லை. எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்று உள்ளது.

* இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் ராகுல் லோக்சபாவில் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு தான் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுல் vs பிரகலாத் ஜோஷி



பார்லி வளாகத்தில் நேற்று மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் சென்று ராகுல் செய்த செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.



ராகுல் ஜாலியாக, ‛‛வாருங்கள்.. நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். ஒன்றாக பேட்டிக்கொடுப்போம்'' என்று கூறினார். ஆனால், அவர்கள் விலகி சென்றனர். ஆனாலும் ராகுல், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கையை பிடித்து இழுத்தார்.


கோபத்துடன் அங்கு இருந்து பிரகலாத் ஜோஷி புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement