கனடா பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் திருநங்கை
ஒட்டாவா: கனடாவில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெண் அல்ல ஒரு திருநங்கை என்பதும், அவர் வீட்டில் தாய் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் பெண் ஒருவர் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு ஆசிரியரும், 12 முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர். அருகில் உள்ள வீட்டில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். தாக்குதல் நடத்திய பெண், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியது, அப்பகுதியைச் சேர்ந்த ஜெஸ்ஸி வான் ரூட்ஸெலார், 18, என்பதும், அவர் ஒரு திருநங்கை என்பதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய அதே பள்ளியில் படித்த ஜெஸ்ஸி, நான்கு ஆண்டுக்கு முன்பு படிப்பை நிறுத்தியுள்ளார். மனநல பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், தன் தாய் மற்றும் சகோதரனையும் அவர் சுட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
-
பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது