இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) தங்கம் விலை கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 1,16,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 13) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் (பிப்ரவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 14,560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
என்றைக்கும் அதிகரித்த தங்கம் விலை குறைய வாய்ப்பில்லைமேலும்
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு