கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில், பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள், மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
Advertisement
Advertisement