கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில், பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள், மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement