மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு
அவிநாசி : அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், மர்ம பொருள் வெடித்து, கட்டடங்கள் சேதமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறைச்சாலை, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உட்பட, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ட் அருகே மாலை, 4:00 மணியளவில், திடீரென பயங்கர வெடித்த சத்தம் கேட்டது. இதனால், தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருந்து கடை, பியூட்டி பார்லர் மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்த மேற்கூரை, ஜன்னல் கண்ணாடிகள் பெயர்ந்து மற்றும் உடைந்து விழுந்தன. தாலுகா ஆபீஸ் காம்பவுண்ட் சுவரும் சேதமானது.
போலீசார் கூறிகையில், 'வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை, அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் போலீசார் ஒப்படைப்பர். மாலை, மது பாட்டில்களை கோர்ட் பணியாளர் தீயிட்டு எரித்தபோது, அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.
வாசகர் கருத்து (4)
SRIRAM - kovai,இந்தியா
14 பிப்,2026 - 19:33 Report Abuse
சும்மா கடுகு வெடித்ததை எதிர் கட்சியினர் சம்பவத்தை பெரிது படுத்திகிறார்கள்..... சட்ட அமைச்சர் 0
0
Reply
பைரவன் - ,
14 பிப்,2026 - 18:47 Report Abuse
அப்ப கோயம்புத்தூர் மாதிரி காஸ் சிலிண்டர் வெடிக்கலையா? காவல் துறையினரின் செயல்பாடுகள் பொது மக்களுக்கு அச்சம் ஊட்டுவதாக உள்ளது. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
14 பிப்,2026 - 17:51 Report Abuse
திருப்பூரிலும் வெடி கலாச்சாரம் பரவுது! 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
14 பிப்,2026 - 17:29 Report Abuse
ஒருவர் இறந்தால் சிலிண்டர் வெடிப்பு. யாருமே காயம் ஆகவில்லை என்றால்
பட்டாசு வெடித்து இருக்கும். இது போலீசார் அறிக்கையாக இருக்கும். 0
0
Reply
மேலும்
-
பிப்ரவரி 16ல் இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர்; மும்பையில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு
-
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
போக்சோ வழக்கில் குழந்தையின் நலன்தான் முக்கியம்; ஐகோர்ட் கிளை உத்தரவு
-
அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு
-
மேம்பால சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு; கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்
-
'வந்தே மாதரம் சைக்ளோத்தான்' மாமல்லையில் விழிப்புணர்வு
Advertisement
Advertisement