வங்கதேசத்திற்கே வெற்றி சொந்தம்: ஒற்றுமையுடன் செயல்பட தாரிக் ரஹ்மான் அழைப்பு
டாக்கா: வங்கதேச பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், வங்கதேச பிரதமராக பொறுப்பேற்க உள்ள தாரிக் ரஹ்மான் கூறியதாவது: இந்த வெற்றி வங்கதேசத்திற்குச் சொந்தமானது. ஜனநாயகத்திற்குச் சொந்தமானது. ஜனநாயகத்திற்காக பாடுபடும் மற்றும் உயிரை தியாகம் செய்த மக்களுக்குச் சொந்தமானது. இன்று முதல், நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். அதுமட்டுமின்றி உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக பொறுப்புடன் செயல்படும் அரசு மீண்டும் உருவாகியுள்ளது. எந்தவொரு தீய சக்தியும் நாட்டில் எதேச்சதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட முடியாது. அடிபணிந்த அரசாக மாற்றப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். மக்களின் நலன்களே நமது வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும்.
வங்கதேச மக்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தடைகளையும் தாண்டி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நீங்கள் வழி வகுத்துள்ளீர்கள். இவ்வாறு தாரிக் ரஹ்மான் கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 216 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி, 20 ஆண்டுகளுக்கு பின், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 60, பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
வாசகர் கருத்து (3)
ரஹ்மான் - ,
14 பிப்,2026 - 19:02 Report Abuse
எதிர்கட்சி ஆளுங்களுக்கும் மந்திரி பதவி குடுங்க.. ஒத்துமையா இருங்க. 0
0
Reply
aru - ,இந்தியா
14 பிப்,2026 - 18:39 Report Abuse
இந்தியா தலையிட்டு இவர்களுக்கு தேசத்தை உருவாக்கி கொடுத்து அதற்காக நாம் இழந்தது அதிகம், அந்த கூறுகள் முழுவதும் சிதைந்து போகமல் இருப்பதால் வாக்களித்து மீண்டும் அரசு பொறுப்பேற்கிறது. இந்தியாவுடன் நல்லுறவை பேசவேண்டும். வம்சாவளியினர் மானம் காக்க படவேண்டும். 0
0
Reply
kulanthai kannan - ,
14 பிப்,2026 - 18:14 Report Abuse
இவரது அப்பா 1980களில் ஜனாதிபதி, தாய் 1990களில் பிரதமர். இன்று இவர். அங்கேயும் கேடு கெட்ட திராவிட மாடலா?? 0
0
Reply
மேலும்
-
சென்னையில் மஹா சிவராத்திரி விழா
-
பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவது அரசின் கடமை: பிரதமர் மோடி
-
மீண்டும் கைகுலுக்காத சூர்யா; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
Advertisement
Advertisement