பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், பயணிகளின் கூட்டம் வார விடுமுறையையொட்டி அதிகரித்து காணப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், சர்வதேச புகழ்பெற்ற வன சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளதால் வெளிநாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டுகளித்து, செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு, வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வனக்காடுகளை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகில் சென்று இயற்கை அழகை கண்டுகளித்து சென்றனர்.

Advertisement