காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறி; நயினார் நாகேந்திரன் சந்தேகம்
மதுரை: காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கும். சென்னை மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டம் பெரிய மாநாடாக மாறி திமுக ஆட்சிக்கு பெரிய பேரிடியாக அமைந்து இருக்கிறது. தற்போது மதுரையில் மீண்டும் நீதி கேட்டு மார்ச் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் தேஜ கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இதுவும் மாநாடாக அமையும்.
வலுவாக இல்லை
எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜ பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். எந்த கூட்டணி வடிவம் பெறவில்லை? மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். முதல்வர் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்கிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. திமுக ஆட்சி முற்றுபெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசால் ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்யப்படவில்லை. இந்த அரசு எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும். 33 லாக் அப் மரணங்கள் நிகழந்து இருக்கிறது.
யார் மனதும்...!
போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செல்லும் பெண்களையும் ஜாதி ரீதியாக திட்டுகின்றனர். ஒரு போலீஸ்காரர் பெண் அதிகாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்று நினைக்க கூடியவன். விஜய்க்கு கொள்கை இருக்கிறதா? பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி? விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுகிறது. கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். சேலத்திலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். அவர்களுக்கு நல்ல சகுனம் தான். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
@block_P@
தேஜ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மார்ச் 1ம் தேதி பார்க்கலாம்'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். block_P
மிஸ்டர் நயினார் காங்கிரஸ் தி மு க கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். பி ஜே பி சென்ற தேர்தலில் வென்ற 4 சீட்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அது போதும். . EPS க்கு ஜால்ரா அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். பி ஜே பி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளுக்கு EPS பிரச்சாரம் செய்ய சொல்லுங்கள். அவரு பி ஜே பி தொகுதிகளுக்கு பெபே காட்டினாலும் காட்டுவாரு.
காங்கிரஸ் திமுகவில் இருக்குமா? என்பது கேள்விக்குறி? இருந்து விட்டால், அது ஆச்சரியக்குறி?
டெபாசிட் வாங்காம இருப்பாரா என்பதே சந்தேகம் ....
திமுக வுடன் காங். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவருக்கு எங்க வலிக்கிறது?
அது இருக்கட்டும், அண்ணாமலை தேர்தல் வரை கட்சியில் இருப்பாரா? வேறே விதமா வெளியே பேச்சு அடிபடுது? அண்ணாமலை இருந்தால்தான் நோட்டோ கூட போட்டி போட முடியும்
உன் கூட்டணி ரொம்ப வீக்கு அதை பலமாக்க வழியப்பாரு முதலில் அப்புறம் எதிர்கட்சியைப்பத்தி பேசலாம்
இதையே திமுகவிடம் சொல்லுங்க
இவரு தேர்தலில் நின்றால் டெபாசிட் வாங்குவாரா? உன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் நீக்கப் பாரும் அய்யாமேலும்
-
யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்
-
டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
பிப் 25-26ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி; 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயணம்
-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியா: கேரள அமைச்சர் மழுப்பல்
-
மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல்; 59 பேர் பலி, 25,000 வீடுகள் சேதம்