2026-27ல் தமிழக அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும்!
சென்னை: வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:
* இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.
* தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
* தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ.327 கோடியில் பணிகள் நடக்கின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
* அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* 19 முக்கிய கோவில்களில் ரூ.1,770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
* 2024ம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழகம் வந்துள்ளனர்.
* 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை புனரமைத்து பாதுகாக்கும் நோக்கில் அரசு நிதி ரூ.425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 84 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.
* இந்தியாவிலேயே முதல் முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி மானியங்கள் ரூ.24 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
* வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
* பொங்கல் பரிசு, மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அரசுக்கு ரூ.10,849 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை
2026-27ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்
திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக
மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை
மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக்
கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28ம் ஆண்டில் 42,964.61 கோடி
ரூபாயாக குறையும். அதன் தொடர்ச்சியாக 2028-29ம் ஆண்டில் 35,115.33 கோடி
ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச்
செலவினத்திற்கு வழிவகை செய்யும்.
கடன்கள்
மத்திய அரசு
நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும்
திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27ம் ஆண்டில் மாநில
அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
மேலும், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச்
செலுத்தும். இதனால் மாநில அரசின் கடன் 2026-27ம் நிதியாண்டில் 10.62 லட்சம்
கோடி ரூபாயாக இருக்கும். நடப்பாண்டில் கடன் ரூ.9.52 லட்சம் கோடியாக
இருக்கிறது. 2026-27ம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்
இது 26.35 சதவீதம் ஆகும்.
@block_P@
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால பட்ஜெட்டில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.block_P
If 2G spectrum corruption = Rs 1.76 lakh Crores, then Rs 10.62 lakh Crores = 12G.
இந்தியாவில் கடனை குறைத்த மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா ஒரிசா. .. உத்தரபிரதேசம் ... ஹிமாச்சலப்பிரதேசம் ....
கோவில்களை பற்றி கணக்கு காட்டியாச்சு... கூட்டி கழிச்சு பாரு எல்லா சரியா லரும்..
இந்த கடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தலைக்கும் 1.25 கோடியாக அறியப்படுகின்றது .
தலைக்கு 1.25 லட்சம் தான்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆகாவ்வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு ஸ்டாலின் அரசு இப்போது முதல் கடனாளி மாநிலமாக மாற்றி இருக்கிறது. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
பாலங்கள், ரோடுகள், போர்ட்கள், ஏர்போர்ட்கள், ஹாஸ்பிடல், பள்ளிக்கூடங்கள் அமைக்க பணமில்லை. ஆராய்ச்சிகளுக்கு பணமில்லை. வேலை வாய்ப்பை கொண்டுவர கம்பெனி அமைக்க மானியம் இல்லை. வெறும் சிறுபான்மை மதம் மற்றும் இலவசம் தான் பட்ஜெட்டில் உள்ளது.
மத்திய அரசின் கடன் பாஜக ஆட்சியில் கடந்த பதினோரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் கோடி ரூபாயாக இருந்தது இப்போது நான்கு மடங்கு உயர்ந்து இருநூறு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது தெரியாமல் பேசுவது அபத்தமானது!
நாட்டை காப்பதற்கு ஆகும் செலவும்..... டாஸ்மாக் சாராய கடைகளை திறந்து மூட ஆகும் செலவும் ஒன்றா ?
நமது தாய்திரு நாட்டின் இப்போதைய கடன் எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டிருந்தால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருந்திருக்கும்.
மக்களே விழித்திருங்கள் .எங்கு யார் கடன் வாங்கினாலும் அவர்கள்தான் அதற்க்கு பொறுப்பு .ஆனால் அரசு வாங்கும் கடனுக்கெல்லாம் மக்களேதான் பொறுப்பு .கட்டப்போவது மக்களே .மக்கள் வரிப்பணமே .சீமான் சொல்வதைப்போல வாங்கிய கடனைஎல்லாம் நேர்மையான முறையில் செலவு செய்திருந்தால் தமிழ்நாடே இந்திரலோகமாகியிருக்கும் .வாங்கிய கடன்களையெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே சுரண்டி ,இமயமலையாக சொத்துக்களை குவித்து வைத்திருக்கின்றார்கள் .வரும் தேர்த்தளில் மாற்று அரசை தேர்ந்தெடுத்து கடந்த 40 ஆண்டுகளில் அரசு பதிவியில் இருந்த்த்தவர்களின் சொத்துக்களை தணிக்கைக்கு உட்படுத்த சட்டமியற்ற சொல்லுங்கள் .அவர்களின் நேர்மையான வருமானத்திற்கு உட்பட்டதை தவிர்த்து மீதியுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து கஜானாவில் சேர்க்க இப்போதே சத்யவாக்கு வாங்குங்கள் .அப்போதுதான் வரும் சந்ததியினரை உங்களால் காப்பாற்றமுடியும் .இல்லையென்றால் அவர்களை கடனில்
தவிக்கவிட்டு செல்வீர்கள் .
மாடல் அரசு என்றால் சும்மாவா? மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் பத்து லட்சம் கோடியை இருமடங்காக உயர்த்தி இருபது லட்சமாக மாற்றி காட்டுவோம்.மேலும்
-
அ.தி.மு.க.,வில் இணைந்தார் அழகிரி ஆதரவாளர் மன்னன்
-
வாக்குறுதி அளித்து விட்டு அதை காப்பாற்றாமல் இருப்பது சரியா? தமிழக அரசிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேள்வி
-
பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
-
விஜய் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
-
சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
-
பணியாளர்களுக்கு உதவி