ஆட்சியில் பங்கு கேட்க உரிமை உண்டு; திடீரென காங்., பக்கம் சாயும் திருமா
சென்னை: ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிர சுக்கு உரிமை உள்ளது . நாங்களும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை,'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய பா.ஜ., அரசின் நெருக்கடிகளை தாக்குப்பிடித்து, பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ளது.
நிதி நெருக்கடி இருந்தும், சட்ட சிக்கல் ஏற்படாதவாறு மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.,வினர் வயிற்றெரிச்சலில் விமர்சிக்கின்றனர்.
'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற கோரிக்கை இயல்பானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கியதில் இருந்தே, ஆட்சி அதிகாரம் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், அதை சாத்தியப்படுத்தும் சூழல் இப்போது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதால், அந்த கோரிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை; அதேசமயம், அக்கோரிக்கையை கைவிடவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கு, காங்கிரசுக்கு உரிமை உள்ளது. இதன் வாயிலாக, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிரணியினர் நம்புகின்றனர்.
தமிழக காங்., தலைவர்கள் என்ன பேசினாலும், இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைமை எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இங்குள்ள முக்கிய பொறுப்பாளர்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இரு கட்சிகளும் பேச்சு நடத்தி, சுமுக தீர்வை காண்பர். பா.ஜ., என்ன சூழ்ச்சி செய்து சதித்திட்டங்கள் தீட்டினாலும் வெல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
என்னங்க இது....பிஜெபியா காங்கிரசை ஆட்சியில் பங்கு கேளுன்னு தூண்டி விடுது...
வரும் சட்டமன்ற தேர்தலில் வச்சி செய்ய அறிவாலயத்தில் திமுக சதியாலோசனை நடத்துவது தெரியவில்லை!
கூட்டணியில் பங்கு லட்சியம்...பிளாஸ்டிக் சேர் நிச்சியம்...குருமா மைண்ட் வாய்ஸ்...
கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் என்றார் அம்பேத்கார் அந்நாளில். தண்ணிய போடு, கூட்டம் சேர், கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் செய் என்று இருக்கு இன்றைக்கு. சமூகநீதி முகமூடி போட்டுக்கொண்டு மற்றவர்களை ஏய்த்து கொள்ளையடித்து வாழும் கூட்டம். மாமூல் கேட்டு மிரட்டிய விசிக எம்எல்ஏ பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காத போதே திருமாவின் மீதிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. பிஜேபி இல்லையென்றால் திருமாவிற்கு இன்றைக்கு அரசியலே இல்லை.
ஓட்டுக்கு 2000 குடுக்கிற தில் உண்டா? உ.பி ஸ்கு 200 ரூவா குடுக்க முடியுமா?
விஜய் அவர்களுக்கு குறைந்த பட்சம் 15% முதல் 20% வாக்குகள் உள்ளன என பெரும்பாலான கணிப்புகள் கூறுகின்றன. இவை தானாக வரும் காசு பிரியாணி கொடுக்காமல் வரும் கூட்டத்திலிருந்து ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். இவருக்கு தலித் மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன அதாவது மொத்த வாக்கு சதவிகிதத்தில் 3% முதல் 4 % வாக்குகள் என வைத்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சிக்கும் 3% முதல் 4% வரை வாக்குகள் உள்ளன என வைத்து கொள்ளலாம். தேமுதிக இவர்களுடன் சேர்ந்தாள் அவர்களுக்கு 1% முதல் 2% வாக்குகள் என வைத்து கொள்ளலாம். பாமக பெரியவர் கட்சிக்கு 2% முதல் 3% வாக்குகள் என வைத்து கொள்ளலாம். பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அவர்களை சேர்த்து கொண்டால் அது ஒரு 2% முதல் 3% வாக்குகள் என வைத்து கொள்ளலாம். அதாவது ஒருவேளை இந்த கூட்டணி அமைத்தால் இவர்களுக்கு 26% முதல் 36% வாக்குகள் பெற நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது. சராசரி 30% வாக்குகள் பெற்று விட்டால் இவர்கள் ஆட்சி அமைக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால் சமமான மும்முனை போட்டியில் 30% என்பது அதிகப்படியான வாக்குகள் ஆகும். இந்த கூட்டணி அமைந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி மாற யோசிக்க கூடும்.
திடீர் என்றல்லாம் சாயவில்லை. காங்கிரஸை உசுபேத்தியதே இவர்தான் என அரசியல் விமர்சர்களில் பெரும்பணிவார்கள் மற்றும் ஸ்டாலினுக்கும் இந்த சந்தேகம் இருபதாக மக்களே மத்தியில் பேசப்படுகிறது.
ஆட்சியில் பங்கு மறுக்க திமுகவுக்கு உரிமை உண்டு என உனக்கு தெரியாதா திருமாவளவன்?
இவருக்கு நல்ல மனசு அடுத்தவர்கள் காங்கிரசுக்கார்கள் ஆட்சியில் பங்கு பெற்றால் தனக்கும் அதிலே பங்கு நிச்சயம் உண்டு என்ற நல்ல எண்ணத்தில்தான் பேசுகிறார் பேசுவதில் எந்த தப்பும் இல்லை உமக்கு தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் மிக மிக அரிது அப்போ உமக்கே தேர்தலில் வெற்றி பெற இல்லாதபோது அடுத்தவர்களுக்கு சிபாரிசு பேசி உமக்கு என்னய்யா பயன்
சாஞ்சா சாயரப்பக்கம் சாயும் செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்து ரொம்ப நாலு ஆகுதாமேலும்
-
ஒரு லட்சம் பேர் வசித்தால் மட்டும் பாதாள சாக்கடை வசதி கிடைக்கும்: அமைச்சர் நேரு திட்டவட்டம்
-
பிரான்ஸ் நிறுவனம் ரூ.2,146 கோடி முதலீடு
-
வாகன தகுதிச்சான்று புதுப்பிப்பு கட்டண உயர்வு ஒத்திவைப்பு
-
கல்வி துறையில் அதிகாரிகள் நியமனம்
-
சரக்குகள் கையாளும் முனையங்கள் 500 ஆக உயர்த்த ரயில்வே இலக்கு
-
புண்ணாக்கு ஏற்றுமதி 42 சதவிகிதம் குறைந்தது