இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை
புதுடில்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 73. கடந்த 1992ல் இவரது தலைமையான அணி உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. பின் அரசியலில் ஈடுபட்ட இம்ரான் கான், 2018-2022ல் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.
ஊழல் வழக்கில் சிக்கிய இவருக்கு, 2023ல் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், 'இவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை, வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது,' என செய்தி வெளியாகின.
இந்நிலையில், இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, நியூசிலாந்தின் ஜான் ரைட் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் சேர்ந்து, பாகிஸ்தான் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில்,'இம்ரான் கான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது. அவருடன் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் இம்ரான் கான், மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கப்படுவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன் ஒரு ஜிஹாதி. இந்தியாவை ஒவ்வரு முறை தோற்கடிக்கும் போது எனது சமுதாயம் வெற்றி பெறுவதாக பார்க்கிறேன் என்று சொன்னவன். என்ன இருக்கிற ஜிஹாதிகளில் படித்த ஜிஹாதி ஆனால் ரத்தம் ஒன்றே.
இவர்கள் அரசியலை தாண்டி ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். இன்றைய கால கட்டத்தில் இருப்பது போல் இரு நாட்டு வீரர்களும் எதிரிகளாக அன்று இல்லை. மைதானத்தை தவிர வெளியில் சகஜமாக பழகுவார்கள். இம்ரான்கான் 1992ல் உலகக்கோப்பையை வென்ற போது இந்தக் கோப்பை இந்தியாவுக்கும் சொந்தமானது எனப் பேட்டி கொடுத்தார். அப்பவும் ஜாவித் மியான்டாட் போன்ற இந்தியாவை முழுமையாக வெறுக்கும் பாகிஸ்தான் வீரர்களும் இருந்தனர். சக பாகிஸ்தான் வீரர்களே கடிந்து கொள்ளும் அளவுக்கு இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டிய வாசிம் ராஜா போன்ற வீரர்களும் பாகிஸ்தான் அணியில் இருந்தனர். சிறு வயதில் இம்ரான் கான் ஆட்டத்தை ரசித்த நமக்கே சிறையில் எலும்புக் கூடு போல இருக்கும் 85 சதவீதம் கண் பார்வையை இழந்த இம்ரான்கானை பார்த்தவுடன் மனது கஷ்டப் படுகிறது என்றால் அவரோடு ஒன்றாக விளையாடிப் பழகிய கபில்தேவ், கவாஸ்கர் போன்றவர்களுக்கு அந்த மன வேதனை இருக்கத்தானே செய்யும். இம்ரானை காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த ஸ்ரீகாந்த் பெயர் ஏன் இல்லை என்பது தெரியவில்லை.
ஒரு மனித நேயமும் வேண்டாம்.... தீவிரவாதிகள் திருந்த மாட்டார்கள்....
அன்பினால் பகைவர்களை நண்பர்களாக அடைய முடியும் என்று சொன்னவர் அண்ணல் காந்தி. Sports என்பது பகைவர்களையும் ஒன்றிணைக்கும். இம்ரான் ஒரு தலை சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன். அவர் விளையாடிய போட்டிகளை சிறுவனாக நான் கண்டு களித்திருக்கிறேன் . அவர் உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்
பிரதமராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்தியாவுக்கு எதிரான போக்கை கொண்டிருந்த நபர் இந்த இம்ரான். இனியும் அப்படிப்பட்ட நிலைதான் தொடரவும் செய்யும். பாம்புக்கு பால் வார்ப்பதை போல. சாதாரண ஆட்டத்தில் ஜெயிக்க பேண்ட் பாக்கெட்டில் சோடா மூடியை வைத்து அதில் தேய்த்து பந்துபோட்ட நபர் இந்த இம்ரான்கான். யோசித்து ஆதரவு கொடுக்கணும்
நீதிமன்ற தண்டனை சரி. சிறைக்குள் சித்திரவதை மனிதாபிமானமற்றது.
மற்றவர்களுக்கு கொடுக்கப்படாத சலுகைகள் இவருக்கு ஏன்?
Mr. Imran Khan was a good cricketer who played and gave his best for his country. He deserves to be treated humanely considering his age, and provided best health care. Its good that Kapil and Sunny, along with well known cricketers across the playing nations have come together in making this request to Pak Government. I hope the request is considered.
கிரிக்கெட் பாசம் .....
உண்மை நண்பேன்டா.
மனித நேயம்மேலும்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை
-
அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
-
வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள்; சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்கள் குறித்து கேலிப்பேச்சு; திமுக எம்பிக்கு வலுக்கும் கண்டனம்