ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: பிப்ரவரி 23ம் தேதி முதல் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக தொடங்கி, உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' - 'விடியல் பயணம்' - 'தோழி விடுதிகள்' - 'புதுமை பெண் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர்.
பிப்ரவரி 23ம் தேதி முதல் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக தொடங்கி, உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.
பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான மத்திய பாஜ, அதிமுகவின் சூழ்ச்சிகளை முறியடித்து, ரூ.5 ஆயிரத்தை தமிழக பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி, 'திராவிடமாடல் 2.0' ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் பெண்களுக்கு உணர்த்திட வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்து மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என பிரசாரத்தை சிறப்பாக அமைந்திட வேண்டும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் பிரசாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியினர் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒராயிரம், ஈராயிரம், மூவாயிரம், நாலாயிரம், ஐயாயிரம்... மாமா சாக்லேட்டு. பாண்டியராஜனின் கதாநயகன் படம் போல் இருக்கு ஸ்டாலின் திமுக நிலமை.
What a game played by Stalin , just borrow the money at commercial interest rate and donate that money as women welfare scheme .
5000 வாங்கிய மக்களே .. ஆட்சியர்கள் வீட்டுக்கு வரும்போது அரசின் கேவல சாராய வியாபாரத்தை எப்போது நிறுத்துவீர்கள் என்று கேளுங்கள் போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேளுங்கள்
நீயும் கேட்கலாம் ..இருநூறு வாங்கினாள் மட்டும் போதாது
எங்கே நேர்மையான, ஊழல் அற்ற ஆட்சி புரிவோம் என்று கூறி வீடு வீடாக பிரசாரம் செய்யட்டும் பார்க்கலாம்.
I am keeping EB card, property and water tax cards ready to show during their visit
பொங்கலுக்கு 3000 போன மாதம் இந்த மாதம் 5000 இப்படி மாதம் 1000 பெண் மகன் 1000 இப்படி ஒரு குடும்பத்திற்கு வருடம் 60000 அமோகம் தான் ,பெத்த அம்மாவுக்கு பெற்ற பிள்ளை கூட 100 ரூபாய் கொடுக்காத கலி காலம் அய்யா இது எங்க முதல் அமைச்சர் அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தவிர்க்க ரூபாய் 5000 மொத்த மாக கொடுத்தது அவர் கருணை உள்ளம் கொண்ட மனித கடவுள்
( அவரது பாணியில்) யார் அப்பன் வீட்டு பணம்?
ஆகூர் அப்போ உன் குடும்பத்தை நீ காப்பாற்றவில்லையா...இது ரொம்ப அசிங்கம்
சொந்த காசா...
இவர் வீட்டு காசா... .
இது ஒரு சாதனையா? மக்களுக்கு சேவை செஞ்சு பல வசதிகளை செய்யத்தான் வாக்கு கொடுத்த… இப்போ எங்க வீட்டு அலமாரியை தொறந்து பணத்தை எடுத்து இன்னொரு அலமாரில வெக்கர… இத எங்க வீட்டு வேலைக்காரன் செய்வாண்டா…
வீடு வீடாக சென்று சொல்லுங்கள்
இங்கே டாஸ்மாக் கடைகளும் மனமகிழ் மன்றங்களும் உங்களை மகிழ்விக்க வீதி தோறும் உண்டென்று.
கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் உயிர் காக்கும் மருத்துவர்கள் சேவை செய்யும் செவிலியர்கள் போக்குவரத்து ஊழியர்கள் சத்துணவுப் பணியாளர்கள் என்று ஒட்டுமொத்தமாக அனைவரையும் வீதியில் இறங்கிப் போராட வைத்து அவர்கள் வயிற்றில் அடிக்கும் திறன் எங்களுக்கு உண்டென்று.
விவசாயிகள் கண்ணீரில் காத்த நெல்லை மழைத் தண்ணீரில் முளைக்க வைத்த திறமை எங்களுக்கு உண்டென்று.
வீட்டு வரி , சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம் , குடிநீர் கட்டணம் இப்படி எல்லாவற்றையும் இரண்டு மடங்காக உயர்த்தி இந்த 5000 யும் உங்களிடம் இருந்து வசூலித்து விடும் திறமை எங்களுக்கு உண்டென்று.மேலும்
-
சாதனையாளர்களுக்கு விருது
-
இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்