கோரிக்கை அட்டை அணிந்து குரூப் 2 அலுவலர்கள் பணி
தேனி: முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும், நேரடி நியமன உதவியாளர்களுக்கு துணை வட்டாச்சியர் பதவி உயர்வு பெற 4 ஆண்டுகள் என்ற விதிகளில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில், பொருளாளர் சுதா, நிர்வாகிகள் ஆதிசிவன், முருகானந்தம் உள்ளிட்டோர் அட்டை அணிந்து பணி செய்தனர். மேலும் சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் கோரிக்கை அட்டை அணி பணி செய்கின்றனர். பிப்., 19, 20ல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏஐ துறையில் இந்தியா காட்டும் மகத்தான நம்பிக்கை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் பாராட்டு
-
மூன்று குட்டிகளை ஈன்ற காமினி: சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
-
காசா அமைதி வாரியத்தில் போப் சேர மாட்டார்: வாடிகன் அறிவிப்பு
-
சீனாவில் தொடரும் சோகம்; பட்டாசு கடை வெடிவிபத்தில் 12 பேர் உடல்சிதறி பலி
-
மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு
-
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை
Advertisement
Advertisement