நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
நமது நிருபர்
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும், 'நானே பா.ம.க., தலைவர்' என அறிவித்து, தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி யாருக்கு சொந்தம் என்பதில், முறையான ஆவணங்கள் அடிப்படையிலேயே அன்புமணிக்கே சொந்தம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறிய விளக்கத்தை டில்லி ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது.
இந்த சூழலில், மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரியும், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை பேச்சை மகன் கேட்பதில்லையா என தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, ''தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை'' என ராமதாஸ் தரப்பு பதில் அளிக்கப்பட்டது.
இதன் பிறகு, தேர்தல் கமிஷன் தரப்பில், ''அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் பாமக விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது'' என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:
* ஏற்கனவே உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மீண்டும் ஐகோர்ட்டை அணுகியது ஏன்?
* உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் கமிஷனை அணுகலாம்.
* நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (9)
R.Jana - Navi Mumbai,இந்தியா
20 பிப்,2026 - 17:53 Report Abuse
சின்னத்தை பற்றி கவலை பாடாத வீரன் சீமான்.
என் வாக்கு சீமானுக்கே 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
20 பிப்,2026 - 20:08Report Abuse
ஜெயிப்பவர்களுக்குத் தான் சின்னம் அவசியம் உண்டியல் குலுக்க அரசியல் செய்பவருக்கு சின்னம் ஒரு பிரச்சினையா?? 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
20 பிப்,2026 - 16:31 Report Abuse
சூப்பர் ஆனாலும் இவர் அடங்கமாட்டார் 0
0
Reply
அப்பாவி - ,
20 பிப்,2026 - 16:25 Report Abuse
தலைவருக்கே இப்பிடீன்னா? 0
0
Reply
Chandru - ,இந்தியா
20 பிப்,2026 - 15:40 Report Abuse
இனிமேலாவது புத்தி வந்தால் சரி 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
20 பிப்,2026 - 17:23Report Abuse
எப்போதும் வராது 0
0
Reply
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
20 பிப்,2026 - 14:57 Report Abuse
மாம்பழம் கைமீறி போய் ரொம்ப நாள் ஆச்சு தாத்தா. வேணும்னா மாங்கொட்டை சின்னத்துக்கு முயற்சி செய்து பாருங்களேன் கிடைக்க வாய்ப்பு இருக்கு ஐயா. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
20 பிப்,2026 - 14:31 Report Abuse
எங்க தாத்தா கோர்ட்டு வளாக மரத்தையெல்லாம் வெட்டி போட்டுருவாரு ..... 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
20 பிப்,2026 - 14:19 Report Abuse
BAN PMK VCK etc etc Parties for Safety of People& Nation 0
0
Reply
மேலும்
-
ரம்ஜான் சிந்தனைகள் -3
-
அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
-
ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
-
மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி
Advertisement
Advertisement