தள்ளாத வயதில் தனிக்கட்சி தொடங்கினார் பண்ருட்டி
சென்னை: எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமசந்திரன், 88, தொடங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குகிறேன். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது. கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் குமார் இருப்பார்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர். சுயேட்சை சின்னத்தில் எங்கள் ஆதரவோடு போட்டியிடலாம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அத்தியாயம் முடிந்தது. ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது. இவ்வாறு பண்ருட்டி ராமசந்திரன் கூறினார்.
யார் இந்த பண்ருட்டி?
* பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு பா.ம.க.,வில் சேர்ந்த அவர், அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
* விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கியதும், அந்த கட்சியில் சென்று சேர்ந்தார். பின்னர் அதில் இருந்தும் விலகி, அதிமுகவில் இணைந்தார்.
* அதிமுக பிளவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். இப்போது தனிக்கட்சியை தொடங்கியுள்ளார்.
* 1967ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனவர் பண்ருட்டி. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, ஐநா சபையில் பேசுவதற்கு எம்ஜிஆரால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புது கட்சி தொடக்கம் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டி பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்
ஆசை யாரை விட்டது
வயசான காலத்துல தேவையா இதெல்லாம். ஆசை யாரை விட்டது. நடத்துங்க. தேர்தல் பணியெல்லாம் ஓடி ஆடி செய்ய முடியுமா பாருங்க முதல்ல.
இந்த வயதில் பெட்டி வாங்கி என்னய்யா செய்யப் போகிறீர்கள் ?
இவர் ஒன்றும் தள்ளாத வயதில்லை
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சுயேட்சை சின்னம் வாங்கி போட்டியிடலாம். எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இது சொன்ன விசயம். சொல்லாத விசயம் அந்த சுயேட்சை வேட்பாளர்கள் குறைந்தது 500 முதல் 2000 ஓட்டுகள் வரை எதிர்கட்சிக்கு விழும் வாக்குகளை தாங்கள் வாங்க வேண்டும். இதுதான் எங்களது புதிய கட்சியின் கொள்கை, லட்சியம். இந்த திட்டத்திற்கான கூலித் தொகை பெற வேண்டிய இடத்தில் ஏற்கெனவே பெறப்பட்டு விட்டது. நன்றி. வணக்கம்.
இருக்குற கட்சிகள் குழப்பங்கள் போதாது என்று இவர் வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு.
நேராக வேறு ஒரு கட்சியில் இப்போ போய் சேர்ந்தால் அது நன்றாக இருக்காது ஆகையால் ஒரு கட்சியை ஆரம்பித்து அந்த 200 தொண்டர்களுடன் வேறு கட்சியுடன் இணைத்து விட்டு ஒரு பதவி வாங்கி விட்டால் அது நல்ல ஐடியா தானே
எதுக்கு இப்படி இவர் செய்கிறார். லெட்டர் பேடு கட்சியாக பணத்துக்காகவா
ஆனாலும் ரொம்பத்தான் தன்னம்பிக்கை!
ஆளாளுக்கு கட்சி தொடங்குனா எவன் ஓட்டு போடுவான்மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை