ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்க காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதி : விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்

23


சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், கருணாநிதியை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.


கடந்த சில நாட்களாக தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்து வந்தது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், பிரேமலதாவோ விரைவில் கூட்டணி அறிவிப்போம் எனக்கூறி வந்தார். தேமுதிக தங்கள் பக்கம் வரும் என தேஜ கூட்டணி தலைவர்கள் கூறி வந்தனர்.

திமுக கூட்டணி



இந்நிலையில், இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோர் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்வதை உறுதி செய்தனர். திமுக கூட்டணி கட்சியினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


இது குறித்து சமூகஊடகங்களில் விவாதித்திற்கு உள்ளாகியது. ஒரு பகுதியினர் தேமுதிகவை பாராட்டியும், இன்னொரு பகுதியில் பிரேமலதாவை விமர்சித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதியை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த்பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

பொய் உச்சம்



அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறியதாவது: கருணாநிதியின் வீடா தமிழ் நாடா என்பது தான் இன்றைக்கு நாடு முன்னாடி நிற்கிறது. ஏனென்றால் தெய்வம் என்பது மக்கள். மக்கள் ஓட்டுப் போட்டால் தானே நீயே வருவ. மக்கள் தான் உங்கள ஊழல்வாதி என்கிறார்கள்.
அந்த கம்சன் அரக்கன் கம்சனை கிருஷ்ணனாகிய மக்களாகிய நீங்கள் அழிக்கணும் என்கிறேன். அதுதான் நடக்க போகிறது. இவர் மாவலி என்று சொல்லி, உடனே என்னுடையது. அது, இது என்று பொய்யோட உச்சத்துல இருக்கார் கருணாநிதி. அதனால மாவலி அரசனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை. யாருக்கும் கதை தெரியல. ஏமாற்றுகிறார்.


இவர் எப்போதும் சொல்லுவார்...தமிழினம், தமிழர்களுக்காக, தமிழுக்காக, அப்படி இப்படி என்பார். தமிழர் அப்படின்னு நீங்க சொல்றீங்க ஒத்துக்குறேன். நீங்க தமிழரோட என்றைக்காவது கூட்டணி வச்சிருக்கீங்களா. உங்கள யாரு வடக்கு போய் கூட்டணி வைக்க சொன்னா? சொல்லுங்க பாப்போம். அண்ணாதுரை போராடி காங்கிரஸ் கட்சியை விழ்த்துனார். இவர் ஆட்சிக்கு வந்து அவர்களோடு கூட்டணி வைக்கிறாரு. 1980ல இவருடைய ஊழல் பூச்சிக்கொல்லி ஊழல், கோதுமை பேர ஊழலில் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி வைக்கிறார். அதன் பிறகு இன்று வரைக்கும் கூட்டணி வைக்கிறார்.
இவர்தான் இந்திராவை அடிச்சாரு. அடிச்சு புட்டு சொல்லிட்டாரு... ரத்தமா... சிகப்பு கலர் ரத்தமா... அது பெண்களுக்கு வர வியாதி தான எப்பயும் போலவும் என சொன்னவர்தான் இந்த சாபக்கேடான கருணாநிதி இவ்வளவும் பேசுகிறார்.

கொள்ளை



இவர் செய்றதெல்லாம் பிராடு. மாநிலத்துல சுயமா கொள்ளை அடிப்போம். மத்தியில கூட்டா கொள்ளை அடிப்போம் என்கிறார். இததான் மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி. இங்க இருக்கற காங்கிரஸ் கட்சியினர், 'முடியாது எங்களுக்கும் பங்கு கொடு' என கேட்கின்றனர். இதுதான் சண்டை தவிர வேற ஒன்னும் கிடையாது. சம்பாதித்ததில் கொஞ்சம் கொடுத்துட்டா கம்ன்னு இருப்பாங்க மந்திரி பதவில்லாம் கேக்கமாட்டார்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

Advertisement