ரூ.1,300 கோடி பாக்கி இருந்தும் மாநகராட்சி அசரவில்லை; 600 பணிகளுக்கு 'ஜெட்' வேகத்தில் டெண்டர்
நமது நிருபர்
சென்னை மாநகராட்சியில், பல்வேறு பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள நிலையில், 1,200 கோடி ரூபாயில் புதிதாக, 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, அசராமல் மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. செலவழிக்கும் தொகை எப்போது வருமோ என, ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் அடிப்படை கட்டமைப்புகளை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. மழைக் காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு, சாலை, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை, மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது.
ஓராண்டாக, மாநகராட்சியில் பல்வேறு பணிகளை செய்த, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிதி விடுவிக்காமல் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் எப்போது பணம் கிடைக்கும் என, காத்துக் கிடக்கின்றனர்.
அச்சம்
அதேநேரம், சட்டசபை தேர்தல் வர இருப்பதால், முன்கூட்டியே அனைத்து பணிகளுக்கான டெண்டரை, மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. தினசரி, 40க்கும் மேற்பட்ட டெண்டர் கோரப்பட்டு வரும் நிலையில், 19 நாட்களில், 600க்கும் மேற்பட்ட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
ஏற்கனவே செய்த பணிகளுக்கான பாக்கி தொகையை விடுவிக்காத நிலையில், தற்போது அறிவிக்கப்படும் டெண்டர் பணியை எடுத்தால், தேர்தலுக்கு பின், எப்போது நிதி விடுவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
தவிப்பு
இது குறித்து, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சென்னையில், அவசரகால பணிகள் என்ற பெயரில், டெண்டர் பணிகளை எடுத்து செய்கிறோம். வெளியே, வட்டிக்கு கடன் வாங்கிதான், அப்பணியை செய்ய முடிகிறது. ஆனால், பணி முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலான திட்டத்திற்கும் நிதி விடுவிக்காமல், மாநகராட்சி காலம் தாழ்த்தி வருகிறது. சில பணிகளுக்கு ஓராண்டாகியும் பணம் வரவில்லை. தற்போது தேர்தலுக்கு முன், 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
1,200 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இப்பணிகளை எடுத்து செய்தாலும், எப்போது நிதி விடுவிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு டெண்டர் பணிகளுக்கு ஏற்ப, 15 சதவீதம் வரை கமிஷன் வழங்கி வருகிறோம். இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணி செய்த பின், ஆட்சி மாறினால், அந்த ஆட்சியாளர்களுக்கும் கமிஷன் கொடுத்தால் தான், நாங்கள் பணியாற்றியதற்கான நிதியை பெற முடியும். இல்லையென்றால், நிதி விடுவிக்க கால தாமதத்தை ஏற்படுத்துவர். இதுகுறித்து, யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_P@
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்தாலும், வருவாய் வரவை விட, செலவினம் அதிகமாக உள்ளது. வரும் நிதியாண்டில், 1,602 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. அதேபோல், 2,000 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு கடன் உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 95 கோடி ரூபாய் வரை வட்டி செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே, பல்வேறு பணிகளை செய்து, பல மாதங்களாக நிதி பெறாமல் ஒப்பந்ததாரர்களும் காத்திருக்கின்றனர். மத்திய, மாநில அரசு நிதி மானியத்தை விடுவிக்காமல் உள்ளது. அதனால், குறைந்த கால அளவிற்குள், அதிகளவிலான டெண்டரை கோர வேண்டாம் என, மாநகராட்சியை எச்சரித்தோம்.
ஆனால், ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, உயர் அதிகாரிகளும், நிதி பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து பணிகளுக்கும் வேகவேகமாக டெண்டர் கோரி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.block_P
டெண்டர் மட்டும் தான் விடுவார்கள். கமிஷனும் வாங்கி விடுவார்கள். ஆனால், ஒப்பந்தப் பணத்தை மட்டும் தர மாட்டார்கள்.ஒப்பந்தக்காரர்களே!ஜாக்கிரதை!
தமிழகத்தை கொள்ளை அடிப்பதுதான் கருணாநிதி கூட்டத்தினர் செய்யும் ஒரே வேலை...அதை மறைக்க ஹிந்தி எதிர்ப்பு , ஒன்றியம் , வடக்கன் என மடை மாற்றுவார்கள்
அரசாங்க வேலை செய்பவர்களுக்கு சம்பளம் மிக அதிகம் , அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்வது இல்லை வருமானம் தரும் தொழில் தனியாரிடம் உள்ளது , ஊழல் ஊழல் ஊழல் இதை சேரி செய்யாமல் ஒன்னும் நடக்காது
ஆட்சி இப்போது 16 வயதினிலே சப்பாணி மாதிரி... சந்தைக்கு போகனும்... ஆத்தா வையும் காசு கொடு என்பது போல அதிகாரிகளை நச்சரித்து தவறு செய்ய துடிக்கிறது.
செய்த வேலைக்குவரவேண்டிய பணம் வராமல், புதிதாக வேலைகளை எடுப்பதை ஒப்பந்ததாரர்கள் நிறுத்தவேண்டும் . ... யாருமே டெண்டர் கோரவில்லையென்றால் பணிகள் நடக்காது . .. மக்களின் வரிப்பணம் , ஒப்பந்ததாரர்களின் உழைப்பு எல்லாம் மிச்சப்படும் ...
முடிந்தவரை சுருட்டும் உத்தி ........
சீக்கிரம் ஆர்டர் குடுத்ததான் போகிறதுக்குள்ள நிறைய சுருட்ட முடியும்..
இந்த லட்சணத்தில் விடியல் பயன உரிமைத் தொகை கோடை சிறப்பு தொகை புதுமைப்பெண்... கேவலமாக உள்ளது
எவ்வளவு பாக்கி வைத்துக்கொண்டு, transformer ஐ சுற்றி க்ரானைட் பதித்து வெட்டி வேலை செய்து கொண்டு இருக்காங்க
அதான் எனக்கு புரியல அந்த ஓட்ட ட்ரான்ஸ்போர்மேர்க்கு எதுக்கு மேக்கப் எவன் கொடுத்த ஐடியா
அந்த மேக்கப் பண்ற இடத்தில் ரோடு குண்டும் குழியா இருக்கு அதை சரிசெய்யாமல் டிரான்ஸ்பர்மாருக்கு சுத்தி அரண்மனை கட்டி கொண்டு இருக்கானுங்க எந்த மீடியாவும் கண்டுக்க மாட்டேங்குதுமேலும்
-
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
-
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
-
கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததைப் போல சுனிதா வில்லியம்ஸூக்கும்... நாசா வெளியிட்ட பகீர் தகவல்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை