ரம்ஜான் சிந்தனைகள் -3

நோன்பு திறந்ததும்...

நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் இருப்பதால், உடலில் சூடு அதிகரிக்கும். அதை தணிக்கும் விதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
நோன்பு இருப்பதால் உடலுறுப்புகள் ஓய்வு எடுக்கின்றன. அதனால் நோன்பு திறந்த பிறகு திடப் பொருள்களை சாப்பிடக் கூடாது. மீறினால் அஜீரணம் ஏற்படலாம்.
இதனால் திரவ உணவான கஞ்சி சாப்பிட்டால் செரிமானமாகும். கஞ்சியில் அரிசி, பருப்பு, நெய், இறைச்சி சேர்ப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அத்துடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், பூண்டு, தக்காளி, வெந்தயம் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். நபிகள் நாயகம் நோன்பு துறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிட்டு நோன்பு துறக்கட்டும் என்கிறார்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:05 மணி

Advertisement