ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
புதுடில்லி: டில்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டம் தேசத்திற்கு அவமானம் என்று பாஜ விமர்சித்துள்ளது.
டில்லியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.
எதிர்பாராத இந்த போராட்டத்தால் மாநாடு நடைபெறும் அப்பகுதியில் திடீர் சலசலப்பு எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரசின் இந்த போராட்டத்தை பாஜ வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜனநாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது என்பது ஒரு தேசிய அவமானம்.
காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் நேரத்தில் கண்ணியத்திற்கு எதிரான ஒரு செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இதனை யாரும் போராட்டம் என சொல்ல மாட்டார்கள். ஏஐ மாநாட்டில் அவர்களின் பணியை செய்து கொண்டு உள்ளனர். சிறந்த முறையில், மிக பிரமாண்டமாக ஏஐ மாநாடு நடப்பதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு பயம் வந்துவிட்டது. நாடு வேகமாக வளர்ச்சி பெறும்போது, புதிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், மக்களின் குரலை கேட்க வேண்டும். அரசியலை தாண்டி மாநாட்டை பார்க்க வேண்டும். இந்த மாநாட்டுக்கு அனைவரும் ஆதரவு அளிப்பதுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறி செல்லும். அனைத்துக்கும் தடையை ஏற்படுத்தும் மனநிலையில் இருந்தால், அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.block_B
அவமானங்களின் பினாமி தலைவன் யார் என்று கேட்டால் ஒரு சிறிய குழந்தைகூட சொல்லும்
Congress has become anti Indian They cannot see and stand anything good happening in the country?Shame on them
உளவு துறைக்கு தெரிந்து இருக்கும். சட்டை இல்லா காங்கிரஸ் வாக்கு சேகரிக்க செல்லும் போது சாட்டை அடி வாங்கும் என்று கணித்து இருக்கும். மாநாட்டில் இப்படி என்றால், வாக்கு சேகரிக்கும் வீட்டில் ஆடை இல்லாமல் கூட அலைவர் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் தோன்றும். இந்த ஆபாச படத்தை முக்கிய இடங்களில் வைத்தால், வீதி, வீட்டின் உள் காங்கிரஸ் கட்சியினரை பெண்கள் விட போவது இல்லை. காங்கிரஸ் கட்சியின் கேடு காலம் உச்சம். கூட்டணிக்கும் கேடு.
அந்த குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
தேசத்தை அசிங்கப்படுத்துவது தான் காங்கிரஸ்இன் லட்சியம்.
காங்கிரஸ் ஒரு பைத்தியக்காரன் கும்பல்.
கான் கிராஸ் யை அழிக்காமல் விடமாட்டார் ராகுல்.
கட்சியின் தலைவன் வெளிநாட்டில் நக்சல்குளடன் சேர்ந்து தேசத்தை அவமானப் படுத்துகிறான். தொண்டன் அதை உள்நாட்டில் செய்கிறான்.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த ஒரு கட்சியின் இன்றைய பரிதாப நிலை இது.
செல்வ பெருந்தகை எல்லாம் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் கட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
நல்ல வேளை. கார்கே ராகுல் கலந்து கொள்ளவில்லை.மேலும்
-
மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரம்ஜான் சிந்தனைகள் -3
-
அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
-
ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
-
மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு