தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை

4


புதுடில்லி: தேர்தல் கமிஷன் மற்றும் மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்டுள்ள மோதல் துரதிர்ஷ்டவசமானது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் நடக்கும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும், திரிணமுல் காங்கிரஸ் அரசு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


எஸ்ஐஆர் தொடர்பான வழக்கை விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: அரசியல் சாசன அமைப்புகள் இடையே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷன் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இப்போது கோரிக்கைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் இடையே மக்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர்.


எஸ்ஐஆர் பணிக்காக மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள நீதிபதிகளை கோல்கட்டா ஐகோர்ட் நியமிக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை காரணமாக அசாதாரண உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


எஸ்ஐஆர் பணியில் எஸ்டிஓ,எஸ்டிஎம் பணிக்கு குரூப் ஏ பிரிவு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி பணியை மேற்கொள்ள மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் குறித்து பிரச்னை எழுகிறது.மாநிலஅரசு அளித்து தேர்தல் கமிஷன் நியமித்துள்ள அதிகாரிகளின் பதவி குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.


சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்யை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் நீக்கவும், மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதி அந்தஸ்தில் உள்ள பதவியில் உள்ளவர்கள் அல்லது முன்னாள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement