வெள்ளி வென்றார் ஹர்மன்ஜோத்

புகுவோகா: ஜப்பானின் புகுவோகா நகரில் 18வது ஆசிய 'கிராஸ்-கன்ட்ரி' சாம்பியன்ஷிப் நடந்தது. இது, வழக்கமான தடகள பாதையில் இல்லாமல், இயற்கை மலை, புல்வெளி, சகதியால் ஆன பாதைகளில் பந்தயம் நடக்கும். இந்தியா சார்பில் 12 பேர் கொண்ட அணி பங்கேற்றது. ஆண்களுக்கான 10 கி.மீ., பந்தயத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஹர்மன்ஜோத் சிங் களமிறங்கினார்.
சமீபத்தில் சர்வதேச பாதி மாரத்தான் போட்டியில் இவர், தங்கம் வென்றிருந்தார். இம்முறை, போட்டியின் பெரும்பாலான நேரத்தில் முன்னிலையில் வந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டி முடிய 500 மீ., துாரம் இருந்த போது, உலக சாம்பியன்ஷிப், ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் (3000 மீ.,) 4 தங்கம் வென்ற ஜப்பானின் ரியுஜி மியுரா, முதலிடம் பிடித்து தங்கம் தட்டிச் சென்றார்.
கடைசி நேரத்தில் பின்தங்கிய ஹர்மன்ஜோத் சிங்கிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

Advertisement