டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 83 பேர் தேர்வு எழுதினர்
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் பிரதான தேர்வு (குரூப் 2) நேற்று நடந்தது.
காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரையில் தேர்வு நடந்தது. தேர்வர்கள், காலை 8:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்தனர். தீவிர சோதனைக்கு பின் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்வெழுத, 103 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில், 83 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்களை பார்த்து திமுக பயப்பட தேவையில்லை: நயினார் நாகேந்திரன்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை
-
உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்; பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்
-
குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை
-
மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்
Advertisement
Advertisement